வணக்கங்கள்....



என் எண்ண பட்டறையின்

எதிர் முன்னே நின்று

அதன் வண்ண பக்கத்தை

அசை போட போகும்

உங்களுக்கு.....

Friday, December 31, 2010

நான் ஏன் மிருகமானேன் ?

பல  முறை  சிந்தித்தபொழுது
என்னையே  நான்  நிந்தித்தேன்
நிபந்தனையின்  பேரில்  என்
வட்ட சதுர  செயல்களை
எண்ணுகையில் மிருகமாயிருப்பதை உணர்ந்தேன். 
நானில்லா  வெளி  துவேஷத்தாலோ
பலமுறை  கூறும்  பொய்களாலோ
முன்விட்டுப்பின்  புறம்  பேசுவதாலோ
பொய்  பாசம் கொண்டதாலோ
நடிப்பதாலோ துடிப்பதாலோ பின் 
சிரிப்பதாலோ  மிருகமாய் மாறிவிடவில்லை
செயற்கையாய்  சிந்தித்த  பொழுதுக்குள்ளே
என்னை  அறியா  பரவசத்தினாலே
வியர்வை  வடிய  போர்வைக்குள்ளே
விடிய  விடிய  காமத்துக்குள்ளே
கன்னிகளோடு உருகும் போதெல்லாம்
சுற்றமும் முற்றும் மறந்தவனாய்
பாதி  கண்கள்  மூடியவனாய்
விம்மும்  நெஞ்சு  உடையவனாய்
வெறிகொண்டு  சுரந்த  போதெல்லாம்
நான்  மிருகமாய்  மாறியிருந்தேன்.

இப்படிக்கு,
விக்...

Followers