வணக்கங்கள்....



என் எண்ண பட்டறையின்

எதிர் முன்னே நின்று

அதன் வண்ண பக்கத்தை

அசை போட போகும்

உங்களுக்கு.....

Saturday, January 7, 2012

கலியுக காதல்கள் !

இந்த தலைப்பு வெகு நாட்களாக என்னை இம்சைப் படுத்திக்கொண்டிருந்தது. ஏனென்றால் நானும் பலமுறை சமூக கட்டமைப்பாகவும், கவர்ச்சியாகவும், ஏக்கமாகவும் திகழும் காதலைப் பற்றி யோசித்ததின் விளைவே ! இதில் என் காதல் மட்டும் அல்ல நான் பார்த்த, கேட்ட, ரசித்த, திகைத்த இப்படி பல யாதும் ஊரே யாவரும் கேளிர் காதல்களும் அடங்கும். எப்படிப் பார்த்தாலும் ஒரு பெண் என்பவள்  காதலுக்கு அச்சானிப் போலத்தான். அவளை சுற்றியே ஆணின் காதல் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அப்படிப்பட்ட காதல் நம் கலியுகத்தில் எப்படி இருக்கின்றது என்று யோசித்துப் பார்த்தால், நிச்சயமாக விஷ்ணு " கல்கி " அவதாரத்தை எடுத்தே ஆக வேண்டும் போல. காதல் ஆரம்பிக்கும் வயது எவ்வளவு சீக்கிரமாய் இருக்கிறதோ அதே வேகத்தில் முடிந்தும் போகின்றது. இந்த இடைவெளியில் ஒரு ஆணும் பெண்ணும் போகும் பயணம் தான் மிக கேவலமாக இருக்கிறது. ஒரு சில புத்திசாலி ஆண்களும் பெண்களும் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் இந்த பயணத்திர்க்குள்  வராமலே தங்கள் பாலினத்தின் சாகசங்களையும் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அது காதலிப்பதை விட கேவலமானது. சரி நமது கதாநாயகன் காதலில் தனது இணையை வீழ்த்துவதற்கு படும் பாடு இருக்கிறதே! அது அப்படியே பில்லியன் ஆண்டுகளாய் மாறாத ஒரு பெண்ணின் psychology க்கு எடுத்துக்காட்டு. எப்படி என்று கேட்கிறீர்களா. கற்காலத்தில் ஒரு பெண் தான் தனக்கு வேண்டிய துணையை தேர்வு செய்வாளாம். தனக்கு வரும் துணை தன்னையும் தனது குழந்தையும் திறம்பட பார்த்துக்கொள்வானா, மிருகங்களிடம் சண்டையிட்டு உணவு கொண்டு வரக்கூடிய பலசாலியா என்று யோசித்து தான் தேர்வு செய்வாளம். அது தான் காலம் தொட்டு நடந்து கொண்டிருக்கின்றது. அதனால் நம் கலியுக பெண்களும் தேடுவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. அது நல்ல விஷயம் தான். ஆனால் அப்படியே விட்டுவிடுவது இல்லை நம் கண்ணிகள். பிடிக்கவில்லை என்றால் நேரில் சொல்ல தைரியம் இருக்காது. அல்லது அந்த ஆண் மகனை சட்டையை பிடித்து எல்லா பிரச்சனையும் எடுத்துக்கூறி சட் என்று அவனை கட் பண்ணியாவது விட்டு விட வேண்டும். அதுவும் செய்ய மாட்டார்கள். போனில் ஆரம்பிக்கும் இந்த கூத்து மெல்ல ஒரு சில ஊரசுற்றல்களுக்கு போய் முடியும். ஆசைகள் பெரிதாய் வளர்ந்து வலியே மிஞ்சுகிறது நம் ஆண்சிங்கத்துக்கு. சரி இதை புரிந்துகொண்டு அவன் விலக நினைத்தால் அவ்வளவு தான். பொறுத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்களுடன் வாழ முடியாதாம் ஆனால் உருவகப்படுத்தாத ஒரு உறவு  மட்டும் வேண்டுமாம். என்ன சொல்வது இதை. இதே போல் வேறு சில version களும் உண்டு. அப்படியே காதலிக்கத் துவங்கி விட்டால் பெண்களின் முதல் டிமாண்ட் அவர்களுடைய நட்பு வட்டத்தை தவறாக நினைக்கக்கூடாது. எல்லை மீறி பழகும் அவள் நண்பனின் லச்சனத்தை சொன்னால் புரியாது. அதே போல் தங்கள் எல்லைக்குள் வரவிடாமல், சகஜமாகவோ தெளிவாகவோ ஆண்களை கையாளத் தெரிவதில்லை. இப்படிப்பட்ட பலகீனம் நமது முந்திய தலைமுறை அம்மாக்களிடமோ, அக்காக்களிடமோ, காதலிகளிடமோ இருந்தது மிக மிக அரிது.  அவர்கள் இருந்த சமூக கட்டமைப்பு கூட காரணமாய் இருந்திருக்கலாம். ஆனால் அதே சமூகமே தான் இன்று அவர்களுக்கு இப்படி ஒரு பலகீனத்தை கொடுத்திருக்கிறது. ஏன் இதே போல் பல பலகீனங்கள் நம் ஆண்வர்க்கத்துக்கும் உண்டு. முன்பு எல்லாம் ஏதாவது ஒரு பெண்ணிற்கு அலைவார்கள். இப்பொழுது கிடைக்கின்ற எல்லாத்துக்கும் அலைகிறார்கள். எப்படியாவது நாமும் ஏதாவது பண்ணிவிட வேண்டும் என்ற ஒரு ஆதங்கம். சில பேர் ஒரு tag வேண்டும் என்பதற்காவது பெண்ணின் வட்டத்துக்குள் எப்பொழுதும் நுழைய ஆசை படுகிறார்கள். ஒரு நெறியுடன் அவ்வளவாக எந்த ஆணும் பழகுவதாய் தெரிவதில்லை. ஆண்கள் பெரிதாக நட்பு நட்பு என்று பேசுவார்கள். ஆனால் நட்பில் பெண் ஆண் பேதமே கிடையாது என்பது அவர்களுக்கு
புரிவதில்லை. மொத்தத்தில் சொல்லப் போனால் நம் ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் தைரியம் கிடையாது. எல்லா பிரச்சனைகளையும் கைகோர்த்து பார்க்கும் பக்குவம் கிடையாது. அவ்வளவு காலம் அது நிலைப்பதுவும் இல்லை. எதிர்த்து நின்று போராடி ஒன்றாய் சுகமாய் வாழும் ஆசை இல்லவே இல்லை. அப்படியே பூசி மொழுகி வாழ்கையை ஓட்டி விடலாம் என்று நினைப்பு. மொத்தத்தில் நாம் பலகீனமான பிறவிகளாய் மாறிவிட்டோம். நாம் ஓடும் சிறு சிறு ஓட்டத்துக்கு யாராரெல்லாம் இளைப்பாற கிடைக்கீறார்களோ அவர்களை அருமையாக பருகிவிட்டு தள்ளாடிய படி ஒரு போதையை நோக்கி பயணிக்கிறோம். பாலினத்திற்கே உரிய கோக்கு மாக்குத்தனத்தை விடுத்து பெண்ணையும் ஆணையும் சமமாக பார்க்கும்  மனோபாவத்திற்கு வருவோம். நான் மேற்கூறிய கருத்திற்கு மாறாக எத்தனையோ குறிஞ்சி மலர்கள் பூத்துக்கொண்டுத்தான் இருக்கின்றன. அவைகள் பெருக வேண்டும். தோட்டமாய் மாற வேண்டும். நம் வீடு முற்றத்தில் பூக்க வேண்டும். அப்படி ஒரு நாள் வராதா என்ற ஏக்கத்துடன் நிறைவு செய்கிறேன்.

இப்படிக்கு,
விக்.

=======================================================================
மேல் கூறிய கருத்துக்கள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல. இது வெறும் ஒரு பார்வை மட்டுமே. தனியாக விலகி நின்று பார்க்கையில் கிடைத்த பார்வை.

Followers