வணக்கங்கள்....



என் எண்ண பட்டறையின்

எதிர் முன்னே நின்று

அதன் வண்ண பக்கத்தை

அசை போட போகும்

உங்களுக்கு.....

Thursday, December 8, 2011

சுமை தூக்கும் கழுதைகள் நாம் !

சீக்கிரம் விடிகின்ற காலை விரட்டி அடிக்கின்றது
பிழைப்புத் தேடி போகின்ற இடம் இருளாயிருக்கிறது
சவம்போல் நான் தூக்கும் கற்களும் வலிக்கின்றது
வருவாய்க்கு வழி செய்கின்ற ராஜாங்கமே வஞ்சிக்கின்றது.
என் கூறை நிழலும் நிலைப்பதாய் தெரியவில்லை
நான் கூற நினைப்பதும் உரைக்குமாவென புரியவில்லை
சுற்றி வாழும் சமூகமே சுடுகின்ற தீயோ நீ ?
வற்றி வதைப்படும் இந்த ஏழை பாவமல்லவோ !
பெரும் பொருள் செய்யும் வணிகர்களே,
கொடுங்கோல் கொண்டு ஆளும் வேந்தர்களே,
சுகமாய் வாழும் உங்கள் வாழ்க்கைக்கு
சுமையை தூக்கும் கழுதையானேன்...

இப்படிக்கு,
விக்...

Thursday, September 8, 2011

மூணார் - ஓர் அதீத உணர்ச்சியா?

என் பிரயாணங்களை எழுத்தாக பதிய வேண்டும் என்று எத்தனையோ முறை ஆசைப்பட்டேன். இது வரை நடந்தது இல்லை. அதற்கு முழு பொறுப்பு நான் தான். ஆனால் கடந்த வாரம் நான் மூணாறுக்கு சென்று வந்தவுடன் அது நிறைவேறப் போகிறது. என் நெஞ்சில் என்றும் அழியா நினைவுகளை உருவாக்கியதுடன் மட்டும் இல்லாமல் என்னை எழுதவும் வைத்துவிட்டது. அதற்கு காரணம் என நான் நம்புவது சரியா என்று தெரியவில்லை. இயற்கையின் பிரம்மாண்டம் தான் மூணார். இந்தப்  பதிவில் எங்களுடைய சுற்றுலா அட்டவணை பற்றியோ நாங்கள் போன இடங்களை பற்றியோ எழுதப் போவது இல்லை. நான் செய்த பயணங்களிலே இயற்கையின் மிக அருகில்  உறவாடியது தான் அதற்கு காரணம் என்று நம்புகிறேன். ஒருவேளை வெள்ளியங்கிரி மலையை முழுவதுமாக ஏறியிருந்தால் அது இதற்கு முன்னமே நடந்திருக்கலாம். காரணம் ஹரிக்கும் எனக்கும் மட்டுமே தெரியும். இயற்கையின் பிரம்மாண்டம் என மூணாறை நான் குறிப்பிட்டதற்கு காரணம் அதன் அமைப்பு தான். அந்த சிறு நகரத்தை சுற்றி இருக்கும் தேயிலை தோட்டங்களும், வெறும் 13 km தொலைவில் இருக்கும் ஆனைமுடி சிகரமும் அதன் வரையாடுகளும், அதன் முகட்டுக்கு பின்னால் இருக்கும் அருவிகளும், காடுகளும், கிராமங்களும் என்னை முற்றுமாய் கிறங்கடித்துவிட்டன. இப்பொழுதும் இதை எழுதும் போது கூட தட்டு தடுமாறச் செய்கின்றன. மூணாறை விட்டு கொஞ்சம் வெளியே சென்ற உடனே அதன் அழகை அவ்வளவு அழகாக உணர முடியும். அவ்வளவும் கொள்ளை அழகு. இந்த பயணத்திலே என்னால் என்றும் மறக்க முடியாதது ஆனைமுடி சிகரத்தை தான். 2675 m உயரத்தை கொண்டிருக்கும் அந்த சிகரம் இன்னும் கண்ணை மூடினால் ஞாபகம் வருகிறது. வெகு அருகில் நடந்து சென்று பார்த்தது எதோ  கிடைக்காத அறிய தரிசனத்தை போலே உணர்கிறேன். அதன் மேல் வழிந்த அந்த அருவியும், அதை மறைத்த அந்த மேகங்களும், விவரிக்க முடியாத அந்த சிகரத்தின் நிலப்பரப்பும் நினைக்க நினைக்க சுகம். போட்டோ எடுப்பதை கூட உதறித்தள்ளிவிட்டு எனக்கு பிடித்த பாடலை பாடிக்கொண்டே ரசித்தேன். கீழே இறங்கும் போது ஏதோ பெரிய ஏமாற்றத்தை சந்தித்த குழந்தையின் ஏக்கம் ஏன் நெஞ்சில் குடிகொண்டது.

இதன் பிறகு நான் வெகுவாக நடுநடுங்கி போனது என்றால் அது லக்கோம் அருவியில் தான். மிகச் சிறிய அருவி தான் அது. இருந்தாலும் இது வரை நான் குழித்த அருவிகளிலேயே மிக வித்தியாசமான அனுபவம். அந்த நீர்வீழ்ச்சியின் அருகில் சென்று யாரும் குழித்திட முடியாது. அவ்வளவு வேகம். இருந்தாலும் கொஞ்சம் முயன்று அருகில் சென்று அந்த சாரலை அனுபவிக்கலாம். அந்த முனைப்புடன் நானும் தேவாவும் நீருக்குள் காலை வைத்தோம். அப்பப்பா அவ்வளவு குளிர். நீரின் வேகமும் அதிகமாய் இருந்தது. முயன்று போய் ஒரு கல்லின் மீது நின்றோம். அதன் பின் நான் அடைந்த உணர்ச்சிகள் பயங்கரமானவை. அந்த சாரல், நீர்வீழ்ச்சியின் சப்தம், கடுமையான குளிர் இது அனைத்தும், என் உடம்பை உலுக்கி விட்டன. இயற்கையின் மீது ஒரு பயம் கலந்த மரியாதையும் அதை ரசிக்கின்ற பாத்தியதையும் கிடைத்ததாகவே நம்புகிறேன். இது போல் என் பயணத்தின் விவரிக்க முடியாத அனுபவங்களும் உணர்சிகளும் எண்ணற்றவை. திரும்பி வருகின்ற வழியில் வெகுவாக மூச்சை இழுத்து வாங்கி கொண்ட பொழுது அந்த நறுமணமும் காற்றும் அவ்வளவு இன்பம். மொத்தத்தில் இந்த பயணம் ஒரு மிகப் பெரிய அனுபவம். எதுவுமே அழுக்காமல் இருக்கும் அந்த திவ்ய சுகம் வாழ்க்கையும் அப்படித்தான் என்று ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. நான் கண்ட அந்தக் காட்சிகளும் எதற்குமே அசராத அந்த கொள்ளை அழகும் இயற்கையின் முன்னால் நாம் ஒன்றுமில்லை என்று முத்தம் கொடுத்துச் சொன்னது போல் இருந்தது. இவ்வளவு பெரிய தாக்கம் ஒரு அதீத உணர்ச்சியாய் நிச்சயம் இல்லை. நான் கடந்த முறை மூணார் சென்ற பொழுது இருக்கும் பக்குவம் இப்பொழுது கொஞ்சம் அதிகமாய் இருப்பது கூட காரணமாய் இருக்கலாம். யாருக்குத் தெரியும் இயற்கையின் விளையாட்டை யாரால் கணிக்க முடியும்.


இப்படிக்கு,
விக்...

Tuesday, August 23, 2011

நானும் என் சமூகமும்

என் பார்வையில் சமுகம் எப்படி இருக்கின்றது என்று யோசித்து பார்க்கையில், முதலில் நான் யார் இதை யோசிப்பதற்கு என்று தோன்றுகிறது. பின் நானும் இதில் ஓர் அங்கம் அதை விட எனக்காக நான் வாழும் சமுகத்தை என்னை விட யாரும் நிர்ணயித்துவிட முடியாது என்பதால் நானே எழுதுகிறேன். இது வெறும் என் பார்வை மட்டுமே !
 என் அன்றாட பொழுதில் நான் அதிகபட்சம் புதிதாக மனிதர்களை சந்திப்பது அரிது. ஆகையில் நானும் எனக்கு ஏற்கனவே நன்கு  பரிச்சையமானவர்களே. இருப்பினும் சுற்றி நடப்பவைகளில் கவனம் செலுத்த முடியாமல் இல்லை. ரொம்ப பெரிதாக முனைந்து முனைந்து ரசித்தாலும் பெரிதாக ஒன்றும் நடப்பதில்லை. கோபம், வெறுப்பு, தேடல், ஆசை, வக்கிரம் இவையே சமூகத்தில் புலப்படுகின்றன. சினிமா, நாட்டு நடப்பு, குடும்பம், காதல், நட்பு, வேலை, உரையாடல் இவை அனைத்திலுமே ஒரு முட்டுக்கட்டை இருக்கத்தான்   செய்கிறது. நகரத்தில் வாழ்வதினால் இவற்றை இன்னும் சுகமாக சுமக்க வேண்டி இருக்கிறது. முதலில் வெளி உலகிலிருந்து வருவோம். எவ்வளவு அரிதான செய்தியை படித்தாலும்  அது ஆச்சரியத்துடனே நின்று விடுகிறது. மிஞ்சி மிஞ்சி போனால் வருத்தமான செய்திக்கு கொஞ்சும் "து து து" போடுகிறோம். மற்றபடி எதுவும் எந்த தாக்கத்தையும் நம் மக்களிடையே ஏற்படுத்துவதில்லை. ஏன் டீ கடையில் கூட நின்று யாரும் இங்கு பெரிதாக பேசுவது இல்லை. ஆனால் இலவசங்களை பற்றி மட்டும் பேசுகிறார்கள்.
பெரிதாக ஏதாவது நடந்தால் கொஞ்சம் கவனம் காட்டுகிறார்கள்.
இப்பொழுது சினிமாவை பற்றி கொஞ்சம் பார்ப்போம். இன்னும் நம் மக்களிடையே சினிமாவிற்கான மோகம் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சினிமாவில் இருப்பவர்களுக்கோ அது இன்னமும் அதிகமாகிவிட்டது. நிறைவையும் ஆழ்ந்த சிந்தனையும் தரக்கூடிய சினிமா கிடைப்பது அரிதாகிவிட்டது. ஒருவேளை நமது ரசனை சரியல்லையோ என்னவோ ? பெரிய வியாபாரமாகவே பார்க்கப்படும் நம் சினிமா கொஞ்சம் மன நிறைவையும் அளித்தால் மிகவும் நன்று.
என் பிராயத்தில் இருக்கும் வயதினருக்கு நேரத்தை எப்படி போக்குவது என்றும் புரியவில்லை, எப்படி போகிறது என்றும் தெரியவில்லை. எங்கள் இளசமுகத்தினரின் கவர்ச்சிக்காக நிறைய விஷயங்கள் இங்கே இருக்கின்றன. நல்ல வேலை, நிறைய பணம், அதிக பகட்டு, ஆபாசம், பைக், கார், தேவையில்லா இங்கிலீஷ், சும்மா சுற்றி பார்ப்பதற்கு ஷாப்பிங் மால், பார்டி, அடுத்தவனுடைய காதலி, என எங்களை ஆக்ரமித்துக்கொண்ட மோகங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றை உண்மையாக ரசனைக்காக பயன்படுத்தத் தெரியாமல் வெறும் பந்தாவுக்கு மட்டுமே அனுபவிப்பதுபோல் நடித்துக்கொண்டிருக்கின்றோம். முகமுடி அணிந்த முட்டாள்களாய் இருக்கிறோம். மற்றபடி பெரிதாக எங்களை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. குடும்ப சூழ்நிலைகளை எடுத்துக்கொண்டால் அது வேறு ஒரு பாதையில் போய்கொண்டிருப்பதாகேவே தோன்றுகிறது. பிள்ளைகளை புரிந்தது போல் பெற்றவர்கள் நடிப்பதும், அதற்கு எற்றார்போல் பிள்ளைகள் ஆடும் நாடகமும் என்னவென்று சொல்வது. உண்மையான பாசம் இருந்தாலும் அதை வெளிப்படுத்த ஏதுவான சூழ்நிலையை குடும்பங்கள் அமைப்பதில்லை. மற்ற சொந்தங்களை பற்றி மறந்து பொய் பல நாட்கள் ஆயிற்று. ஏன் நான் கடைசியாக என் பெரியப்பாவிடம் எப்போது பேசினேன் என்று ஞாபகம் இல்லை. அதற்கு அவசியம் இல்லாதது போலவே தோன்றிவிட்டது. அடுத்தது கல்வி. அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நல்ல தொழில். அதிக வருமானம். விருப்பம், ஆர்வம் என்பதற்கு ஏதுவாய் இல்லாமல் வெறும் நல்ல வேலை அதிக CTC இவற்றை வைத்தே மாணவர்கள் முன் வைக்கப்படுகிறது. காஸ்ட்லி ஆன MBA அல்லது ஏதாவது வெளிநாடுகளில் MS ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இலக்கிய கல்வியை கொஞ்ச நாளில் syllabus இல் இருந்து எடுத்துவிடுவோம். சமுகத்தின் என்னுடைய புரிதல் இதுவே என படுகிறது. இந்த புரிதல் சரியா தவறா என்று தெரியவில்லை. அனால் இது ஆரோக்யம் இல்லை என்று மட்டும் தெளிவாக புரிகிறது. இந்த புரிதலில் என்னுடைய தவறு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அந்த அளவு என் சமூகத்திடமும் இருக்கிறது. தன்னிச்சையாய் எதுவுமே சாத்தியம் இல்லை. இதற்கு விடை கூட என்னிடம் இருக்கின்றதா என்று தெரியவில்லை. அதை சொல்லவும் அறுகதை இல்லை. இருப்பினும் என்றோ ஒரு நாள் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையில் இந்த பழைய அழுகிய சித்தாந்தமும் சமூகத்தையும் அசை போடவாவது இந்த பதிவுகள் இருக்கும் என்று நம்புகிறேன்.

நம்பிக்கையுடன்,
விக்...



Thursday, February 3, 2011

புதியவன்


துகள்கள் பல சேர

உருவான நம் அண்டம்;

வரலாற்றின் பல முரண்பாடால்

படைக்கப்பட்ட நம் கடவுள்கள்;

ஆதாம் ஏவாள் முதலியோர்

யார்? எப்போது? எப்படி?

கிரீன்லாந்தின் 56,452 பேர்!   

மாயன் நாகரீகம் மட்டும்

முற்போக்காய் கணிக்க முடிந்தது எவ்வாறு ?

நிஜ சினிமா, இமயமலை, இரண்டாவது காதல்...

என புரியாமற் போனவைகளும்

ஆகப் புரியச் செய்தவைகளும்

நிஜக் கோணங்களில் இருந்து

விலகியவைகளாய் அல்லாமல்

சராசரி படைப்பின் ஜீவிதத்தோடு

அணுகும்  போல் மற்றுமோர்

புரியாத புதியவனாய் ஆகிறேன்

நான் எனக்கு.

இப்படிக்கு,
விக்...

Wednesday, January 26, 2011

பொரிந்து போன நெஞ்சம்

எத்தனை எத்தனை சித்தாந்தமும்

அத்தனை அத்தனை கோட்பாடும்

சட்டென முன்னால் சாய்கிறதே!

சத்தியம் அன்பு காதலென்று

நீ உரைத்தது எல்லாம் சாகிறதே!

வற்றி போகின்ற நதி போல

வராமல் வருத்தும் வெள்ளம் போல

என் நம்பிக்கை எல்லாம் போகிறதே!

அசட்டுச் சிரிப்பு பதுமையே

அழுக்கு உள்ளம் படைத்தவளே

உன் நிழழும் ஏழனமாய் பார்க்கிறதே!

என் நிஜமும் என்னைவிட்டு பறக்கிறதே!

குருதியும் கண்ணீராய் மாறுதடி

குருடனாய் நானும் போனேனடி

போதும் உன் விளையாட்டு

பொரிந்தே போனேன் என் நெஞ்சோடு.

இப்படிக்கு
விக்...

Sunday, January 23, 2011

கனவில் ஒரு அனுபவம்

காதலின் அவஸ்தைகளில் இருந்து மீண்டு வந்திருக்கும் ஒருவனின் வாழ்வில், ஒரு பெண் அவனுடனே கனவில் ஒரு வாரம் இருந்திருப்பாளாயின் அதன் நிகழ்வுகளே இந்த கற்பனை கட்டுரை.

---------------------------------------------------------------------------------------------------------

ஏதும் புரியாது சிந்தித்து கார்த்திக் தனது மொபைல் இல் உள்ள காண்டக்ட்ஸ் ஐ எல்லாம் ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருந்தான்.அவனுக்கு யாருடனாவது
அப்பொழுது அதிகம் பேச வேண்டும் என்று தோன்றியது ஆனால் யாரும்

Monday, January 10, 2011

உன்னுடன் இருக்கையில்
காதலிப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்தாய்
உன்னிடமிருந்து விலகுகையில்
காதலை மறப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்கிறாய்

இப்படிக்கு
விக்...

Followers