வணக்கங்கள்....



என் எண்ண பட்டறையின்

எதிர் முன்னே நின்று

அதன் வண்ண பக்கத்தை

அசை போட போகும்

உங்களுக்கு.....

Wednesday, June 27, 2012

எனக்காய் பிறந்தவளே !

எனக்காய் பிறந்தவளே, எதற்கோ கோவம் கொண்டாய்
உன் குவிய கண்களை மறப்பேனா, நறுமண வாசனை துறவேனா ?
திகட்டாத உன் அன்பில் திளைவேனே !
தெரியாமலும் உன் திருமுகத்தை மறவேனே !
பச்சிளம் குழந்தையின் பாசமும், பகட்டில்லா பேச்சும்
நெறிகொண்ட பார்வையும், நெருப்பாய் சுடும் கோவமும்
கவின்மிகு கட்டழகும், களங்கமில்லா குணமும்
திகைக்க செய்யுதடி என்னை, திரட்டி வந்தேன் என் அன்பை !
தவமே ஆனாலும் கலைப்பேன் உனக்காக
தவறி மட்டும் உனை பிரியேன் என் உயிராக !

- விக்

Friday, June 15, 2012

மறுமுறை ஒருமுறை ?




தவித்து தவித்து என் தாகத்தின் மோகம் குறையவில்லை
நினைத்து நினைத்து என் நெஞ்சத்தின் சோர்வு விளங்கவில்லை
அனைத்துமே எனதாக்க ஆசை ஒன்றுமில்லை
அனைத்திலுமே ஊடுருவி செல்ல என் ஆசை மறக்கவில்லை
தடுக்கி தடுக்கி விழுந்தாலும் தவழ்ந்தே செல்வேன்
தடமே புரண்டாலும் கவிழ்ந்து நிமிர்ந்து எழுவேன்.
நிஜமே நிஜமாய் சொல்லு,
எனக்கு பகையும் உண்டோ ? எதற்கு ?
உன் பகடை என் பக்கம் சாயாது போட்டும்
என் பழியே உன் மீது சேராது போட்டும் !
நன்கு வாழ்வேன், நலமோடு இருப்பேன்
நால் திசைக்கும் போவேன், நானூறு முறை இறப்பேன் - ஆனால்,
என்றும் மறவேன், எதற்கும் துணிவேன்
மறுமுறையேனும் பிறந்து வந்து அடைவேன் !!!!!

- விக்

Followers