நண்பர்களே,
என்னுடைய வலைப்பூவில் முதல் ப்ளாக்ஐ எழுதுவதில் மட்டற்ற சந்தோஷம்.
தமிழில் எழுத ஆசை பட்டு ஒருவழியாக எனது ஆசையை நிறைவேற்றிவிட்டேன் ( கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் ).
இதில் எதை பற்றியும் நான் பேசபோவதில்லை. இந்த அனுபவம் ஒரே ஒரு நினைவைத்தான் கொண்டு வருகின்றது. எப்பவோ ஆர்வப்பட்டு ஏதோ ஒரு சுஜாதா அவர்களின் புத்தகத்தை படிக்கின்ற பொழுது அவர் இணையத்தில் தமிழில்
வலைப்பூவினை உருவாக்குவதும் அதில் உள்ள பிரச்சனைகளை பற்றியும் கூறி இருந்ததும் ஞாபகம் வருகின்றது. யுனிகோட் முறை பற்றியும் தமிழை அம்முறைக்கு மாற்றுவதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் அவர் கூறி இருந்தார்.
அவருடைய கனவு நிறைவேறியதா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் அப்பொழுது படிக்கும் பொழுது ஒன்றும் புரியவில்லை இப்பொழுது கொஞ்சம்
புரிகிறது.........இந்த கருத்தினை படிக்கும் எவரா இருப்பினும் தங்களுடைய கருத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஆ.விக்னேஷ்வரன்.
1 comment:
enaku unnudaiya udhavi vaendum. ennudaiya karuthukalai blog'il tamil mozhiyil ezhudha. ipadiku unnudaiya pazhaiya iniya nanban.
-vinoth.
Post a Comment