வணக்கங்கள்....



என் எண்ண பட்டறையின்

எதிர் முன்னே நின்று

அதன் வண்ண பக்கத்தை

அசை போட போகும்

உங்களுக்கு.....

Wednesday, June 27, 2012

எனக்காய் பிறந்தவளே !

எனக்காய் பிறந்தவளே, எதற்கோ கோவம் கொண்டாய்
உன் குவிய கண்களை மறப்பேனா, நறுமண வாசனை துறவேனா ?
திகட்டாத உன் அன்பில் திளைவேனே !
தெரியாமலும் உன் திருமுகத்தை மறவேனே !
பச்சிளம் குழந்தையின் பாசமும், பகட்டில்லா பேச்சும்
நெறிகொண்ட பார்வையும், நெருப்பாய் சுடும் கோவமும்
கவின்மிகு கட்டழகும், களங்கமில்லா குணமும்
திகைக்க செய்யுதடி என்னை, திரட்டி வந்தேன் என் அன்பை !
தவமே ஆனாலும் கலைப்பேன் உனக்காக
தவறி மட்டும் உனை பிரியேன் என் உயிராக !

- விக்

No comments:

Followers