நினைத்து நினைத்து என் நெஞ்சத்தின் சோர்வு விளங்கவில்லை
அனைத்துமே எனதாக்க ஆசை ஒன்றுமில்லை
அனைத்திலுமே ஊடுருவி செல்ல என் ஆசை மறக்கவில்லை
தடுக்கி தடுக்கி விழுந்தாலும் தவழ்ந்தே செல்வேன்
தடமே புரண்டாலும் கவிழ்ந்து நிமிர்ந்து எழுவேன்.
நிஜமே நிஜமாய் சொல்லு,
எனக்கு பகையும் உண்டோ ? எதற்கு ?
உன் பகடை என் பக்கம் சாயாது போட்டும்
என் பழியே உன் மீது சேராது போட்டும் !
நன்கு வாழ்வேன், நலமோடு இருப்பேன்
நால் திசைக்கும் போவேன், நானூறு முறை இறப்பேன் - ஆனால்,
என்றும் மறவேன், எதற்கும் துணிவேன்
மறுமுறையேனும் பிறந்து வந்து அடைவேன் !!!!!
- விக்
1 comment:
Nice one Vignesh...
keep going...
நால் திக்கும் போ... நானுறு முறை இறந்து எழு
கனவுகளுக்கு சாயம் தீட்டு.
காட்டு கொள்கைகளை தீயிட்டு கொளுத்து.
தோல்விக்கும் வெற்றிக்கும் நடுவே கொடி பிடித்து நட
ஆனால் சகல சம்பவங்களிலும் சரி பாதியை நிற்கும் -
நட்புக்கு மட்டும் ............................
மச்சி ஒரு quarter சொல்லேன்.!!!!!!!! :) :) :)
Post a Comment