வணக்கங்கள்....



என் எண்ண பட்டறையின்

எதிர் முன்னே நின்று

அதன் வண்ண பக்கத்தை

அசை போட போகும்

உங்களுக்கு.....

Sunday, September 12, 2010

சிதறி கிடக்கும் உன் ஆசைகள்.....

ஓவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு ஆசை வந்துருக்கிறது. சில நிறைவேறி திருப்தி படுத்தியிருக்கின்றன.சில வகையறா ஆசைகள் என் தூக்கத்திற்கு முன் வந்து சற்று நேரம் அதன் துவக்கத்தை நீட்டி இருக்கின்றன. ஏன் சில நாட்கள் நானே அந்த முயற்சியில் இறங்கி என் நிறைவேறா ஆசைகளை நினைத்து நினைத்து புரண்டிருக்கிறேன். அப்படி புரளும் பொழுது எந்த வித சலனமும் இல்லாமல் என் ஆசைகள் அவ்வளவு அழகாய் என் மனதில் புரண்டு கொண்டிருக்கும். உண்மையாகத்தான் சொல்லுகிறேன் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது தேவியிடம் எப்படி பேச வேண்டும் எவ்வாறு அவழுடன் பழக வேண்டும் என்று புழுங்கி கொண்டிருக்கும் போது ஜீவிதா பற்றிய நினைவுகளோ அவளை இன்று மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையின் நினைவோ எனக்கு வந்தேதே இல்லை. எத்தனையோ நாட்கள் " கோ கோ " விளையாட்டில் எங்கள் அணியின் First 3 இல் இறங்கி வெகு நேரம் ஓடி வெற்றியை தேடி தருவது போன்ற நினைவுகளில் இருந்து மீண்டு வர முடிந்ததில்லை.
ஏன் இன்று கூட உடனே தூங்க வேண்டும் என்று நினைத்து வெள்ளித்திரையின் கனவுகளோடு விளையாடி, அதன் துவக்கமாய் இப்படி எழுதுவது என பல ஆசைகள். விளையாட்டுத்தனமாய் பல்வேறு சிறு ஆசைகளோடு போராடி வென்று இருப்பதை நினைத்தால் பெருமையாகத்தான் இருக்கிறது. ஐயர் கடை பஜ்ஜி, தாத்தா பூ, Beer, முதல் ரேங்க், arrear, no history of arrears( இவை இரண்டுக்கும் ஒரு கதை இருக்கிறது ) , லேப்டாப், ECR drive, நான் கடக்க வைத்த ஒரு முழு இரவு, குட்டி குட்டி கவிதைகள் இப்படி இவைகள் எல்லாமே என்னிடம் தோற்ற ஆசைகள்.மறுபுறம் இன்னும் சில மிக பெரிய ஆசைகளை நோக்கி நகர்ந்து கொண்டுத்தான் இருக்கின்றேன். அவற்றுள் பல, யதார்த்த மனித ஆசைகளாகவும், அல்பத்தனமான கனவுகளாகவும், உணர்சிகளின் வெறியாகவும், வித்தியாசமான முயற்சியாகவும் இருக்கின்றன. என் நிழல் வாழ்க்கை போராட்டத்துடன் இவை எல்லாம் கலந்துவிட்டன. சிலவற்றை நோக்கி பயனிப்பதுவும் சிலவற்றை கிடப்பில் போடுவதுமாய் நகர்ந்து கொண்டிருக்கின்றேன். நான் அடைந்தே தீர வேண்டும் என்று நினைத்ததை நோக்கி பயணிக்காமல் கூட இருந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவை எனக்கு அசை போடும் பொழுது சுகமாய் இருந்திருக்கின்றன. என் விருப்பத்துக்காக நான் கண்ட ஆசைகளை எல்லாம் கடந்து எனக்குள் ஒரு புது ஆசை முளைத்திருக்கிறது.
அது என் சுற்றத்தின் சிறுபிள்ளைத்தனமாய், எதிர்பார்ப்பாய், அத்தியாவசமாய் என பல்வேறு விதமாய் சிதறி கிடக்கும் ஆசைகளை எல்லாம் மௌனமாய் அவர்கள் மனதில் சென்று பார்ப்பது, உணர்வது மற்றும் ரசிப்பது(அனுமதியோடும் அனுமதி இல்லாமலும்).

இப்படிக்கு,
விக்...

No comments:

Followers