வணக்கங்கள்....



என் எண்ண பட்டறையின்

எதிர் முன்னே நின்று

அதன் வண்ண பக்கத்தை

அசை போட போகும்

உங்களுக்கு.....

Wednesday, September 22, 2010

நிழல் அறியா மரம்...

      
நசநசக்கும் என் சொற்களாய் இருந்தால் என்ன


நட்போடு  அதை வாங்கிக்கொள்கிறாய்


படபடக்கும் என் அவஸ்தைகளாய் இருந்தால் என்ன


பற்றோடு என்னை ஏற்றுக்கொள்கிறாய்


தன் நிழல்  அறியா  மரம் போல் இருப்பவளே!


உன் நிஜ வலி தான் என்ன?


எனை ஈன்று நீ பெற்ற வலியை விடவும்


உனை ஈற்று நான் பெற்ற சுகமும்


கருகி போகுதடி என் கண்ணீர் முன்னால்...




இப்படிக்கு,


விக் (என் அம்மாவின் நினைவோடு)....

No comments:

Followers